பப்பாளி சாகுபடி
![]() |
| பப்பாளி சாகுபடி |
பழ வகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், பப்பாளியைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல மகசூலையும், அதிக லாபத்தையும் ஈட்டலாம்.பப்பாளி ஒரு குறுகிய கால பணப்பயிர். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிர்களில் இது முதன்மையானது. முறையான சாகுபடி நுட்பங்களைக் கையாண்டால், ஒரு ஏக்கரில் பல லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும்.
பப்பாளி பயிரிடும் முறை மற்றும் விற்பனை முறையை பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளது:
➋. பருவம்:
ஆண்டு முழுவதும் பப்பாளி சாகுபடி செய்யலாம், இருப்பினும் ஜூன் முதல் செபடம்பர் வரை உள்ள காலகட்டம் பப்பாளி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.
➌. மண் மற்றும் தட்பவெப்ப நிலை:
♦ பப்பாளி பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும், களிமண் நிலத்தில் சாகுபடி செய்யக்கூடாது.
♦ சமவெளி பகுதிகளில், மிதமான வெப்பம் முதல் சற்றே அதிக வெப்பம் வரை உள்ள இடங்களில் பப்பாளி நன்றாக வளரும்.
♦ மலைப் பகுதிகளில், சுமார் 1,200 மீட்டர் உயரம் வரை பப்பாளி பலரும்.
♦ நல்ல வடிகால் வசதி இருப்பது அவசியம், இது தண்டு அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த உதவும்.
➍. நிலம் தயாரித்தல்:
♦ நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்ய வேண்டும்.
♦ 1.8 மீட்டர் இடைவெளியில், 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ. மீ ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும்.
♦ குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி, நாற்றுகளை குழியின் மத்தியில் நட வேண்டும்.
➎. பப்பாளி விதைப்பு:
♦ ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் விதைகள் போதுமானது.
♦ ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
♦ நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலிதீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.
♦ ஒரு பாலிதீன் பையில் நான்கு விதைகள் விதைக்க வேண்டும்.
♦ பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூ வாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
♦ நாற்றுகள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.
➏. நீர் நிர்வாகம்:
♦ வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
♦ செடிகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
➐. உர மேலாண்மை:
♦ ஆண், பெண் செடிகளை நீக்கியவுடன், செடி ஒன்றுக்கு 50 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளிக்க வேண்டும்.
♦ மேலும், செடி ஒன்றுக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா அளிக்க வேண்டும்.
♦ உரம் இட்ட பின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
♦ துத்தநாக சல்பேட் 0.5 சதவீதம் மற்றும் போரிக் அமிலம் 0.1 சதவீதம் என்ற கலவையை நடவு செய்த 4 வது மற்றும் 8 வது மாதங்களில் தெளிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும்.
➑. பின்செய் நேர்த்தி:
♦ செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது, 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விடவேண்டும்.
♦ ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டுவிட்டு, மற்ற ஆண், பெண் செடிகளை நீக்க வேண்டும்.
♦ கோ .3 மற்றும் கோ .7 போன்ற இருபால் ரகங்களில், இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்து கொண்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.
➒. பயிர் பாதுகாப்பு:
♦ நாற்றங்காலில் நூற்புழு தாக்குதலைத் தடுக்க, ஒரு பாலிதீன் பையில் ஒரு கிராம் கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை இட வேண்டும்.
♦ வேர் அழுகல் நோய்: செடியின் மெல் பாகத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கி நின்றால் இந்நோய் பரவும். இந்நோய் தாக்கிய செடிகள் வாடி இறந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த 0.1 சதவீதம் போர்டோக் கலவை அல்லது 0.2 மயில் துத்தநாகம் கரைசலை வேர் நனையுமாறு ஊற்ற வேண்டும்.
➓. பப்பாளி அறுவடை செய்வது குறித்து விரிவாக காண்போம்:
அறுவடைக்கான சரியான நேரம்:
♦ பப்பாளி நடவு செய்த 9 முதல் 10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
♦ பழங்கள் முக்கால் பாகம் மஞ்சள் நிறமாக மாறியவுடன் அறுவடை செய்யலாம்.
♦ பழங்களின் மேல் காயங்கள் ஏற்படாமல் கவனமாக கையாள வேண்டும்.
⓫. அறுவடை செய்யும் முறை:
♦ பழங்களை கைகளால் மெதுவாக திருகி எடுக்க வேண்டும்.
♦ கூர்மையான கத்திகளைப் பயன்படுத்தியும் அறுவடை செய்யலாம்.
♦ பழங்களின் மேல் காயங்கள் ஏற்படாமல் கவனமாக கையாள வேண்டும்.
♦ அறுவடை செய்த பழங்களை குளிர்ச்சியான இடத்தில் சேமிக்க வேண்டும்.
⓬. அறுவடைக்கு பின் செய்ய வேண்டியவை:
♦ பழங்களை தரம் பிரித்து, சந்தை தேவைக்கேற்ப பேக்கிங் செய்ய வேண்டும்.
♦ பழங்களை நீண்ட தூரத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமெனில், குளிர்பதன வசதியுள்ள வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.
பப்பாளி விற்பனை செய்வது எப்படி என்பது பற்றி விரிவாக காண்போம்:
⓭. விற்பனைக்கான வழிகள்:
உள்ளூர் சந்தைகள்:
உங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் சந்தைகளில் பப்பாளியை நேரடியாக விற்பனை செய்யலாம். இங்கு விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதால், நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
⓮. சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் பழக்கடைகள்:
சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பழகடைகளுடன் ஒப்பந்தம் செய்து பப்பாளியை விற்பனை செய்யலாம். இங்கு தொடர்ந்து விற்பனை வாய்ப்புகள் கிடைக்கும்.
⓯. பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள்:
பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யலாம். இங்கு மொத்தமாக விற்பனை செய்ய முடியும்.
⓰. அதிக மகசூல் பெற சிறந்த வழிமுறைகள்
⓱. பப்பாளியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் (Value Added Products)
⓲. அரசு கடன் மற்றும் மானியம்
⓳. செலவு மற்றும் லாபம்
⓴. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
ஏற்றுமதி:
♦ பப்பாளியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
♦ இதற்கான தகுந்த ஏற்றுமதி நிறுவனகளை அணுகுவது சிறந்த வழி.
விற்பனையில் கவனிக்க வேண்டியவை:
தரமான பழங்கள்:
♦ தரமான, நன்கு பழுத்த மற்றும் காயங்கள் இல்லாத பழங்களை விற்பனை செய்ய வேண்டும்.
♦ ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்வதை தவிர்க்கவும்.
சரியான பேக்கிங்:
♦ பழங்களை அழகாகவும், பாதுகாப்பாகவும் பேக்கிங் செய்ய வேண்டும்.
♦ அதன் மூலம் பழங்கள் விரைவாக கெட்டு போவதை தவிர்க்கலாம்.
சரியான விலை நிர்ணயம்:
♦ சந்தையில் உள்ள விலைக்கு ஏற்ப, நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
♦ சந்தையில் உள்ள தேவைகள், பழங்களின் விலை நிலவரம் போன்றவற்றை தெரிந்து கொண்டு விற்பனை செய்ய வேண்டும்.
சந்தைப்படுத்துதல்:
♦ பப்பாளி பழங்களின் நன்மைகளை விளம்பரப்படுத்தி விற்பனையை அதிகரிக்கலாம்.
♦ இணையம் மற்றும் உடகங்கள் வழியாகவும் விளம்பரம் செய்யலாம்.
கூடுதல் தகவல்கள்:
♦ பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
♦ பப்பாளி பழங்களை உண்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் செரிமான பிரச்சனைகள் குறையும்.
இந்த முறைகளை பின்பற்றி பப்பாளி விற்பனை செய்தால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
முடிவுரை:
பப்பாளி சாகுபடி என்பது சரியான திட்டமிடல் இருந்தால் ஒரு தங்கச் சுரங்கம் போன்றது. முறையான ரகத் தேர்வு, சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் நோய் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் உயர்த்திக் கொள்ள முடியும். நேரடியாகப் பழங்களை விற்பனை செய்வதோடு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால் கூடுதல் லாபம் உறுதி.

0 கருத்துகள்
Please Comments